ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

Published by
பால முருகன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று இந்த டி-20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மோதும் டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது.

இதன் காரணமாக இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் இருப்பதால் இந்த டி20 தொடரில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லப்போகிறது என்பதனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி போட்டி இன்று நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அதில் இரண்டு போட்டிகளிலும் 2-வதாக எந்த அணி பேட்டிங் செய்ததோ அதே அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

இந்த டி20 தொடரில் வெற்றிபெறவேண்டும் என இரண்டு அணி வீராங்கனைகளும்  மும்மரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ரிச்சா கோஷ்(wk), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங், மன்னத் காஷ்யப், யஸ்திகா இஷாகுவே, சைகா பாட்டியா, அஹுஜா, மின்னு மணி

ஆஸ்ரேலியா 

அலிசா ஹீலி(c/wk), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஷட், ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனாசென், அலனா பிரவுன் கிங், டார்சி

 

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago