ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு முக்கிய பதவி – மணிப்பூர் முதல்வர் செயலகம் அறிவிப்பு..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி பதவி வழங்குவதாக மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மூன்று நாட்களாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பதக்கம்:

அதன்படி, நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு,ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் பெற்றார் .இதனால்,தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாக இது கருத்தப்படுகிறது. இதில்,சீனாவின் ஹோ சிஹாய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.

புதிய சாதனை:

இதற்கு முன்னதாக இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நிலையில்,தற்போது மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதனால்,ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.மேலும்,ஒலிம்பிக்கில் முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

பரிசுத் தொகை அறிவிப்பு:

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளதையடுத்து,முன்னதாக அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் அறிவித்தார்.

முக்கிய பதவி:

இந்நிலையில்,மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்குவதாக மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.

தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்பு:

ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சிஹாய்க்கு ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீராபாய் சானு – ஆரம்பம்:

ஆரம்பத்தில் கிளாஸ்கோவின் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை வகுப்பில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.பெண்கள் 48 கிலோ பிரிவில் சானு 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனை படைத்தார்.

இதனை தொடர்ந்து,2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.தற்போது,டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

விருது:

விளையாட்டில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவருக்கு 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

14 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

38 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

2 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

3 hours ago