ஆசிய விளையாட்டு போட்டி ஏற்பாடுகளுக்கு ரூ.8 லட்சம் வழங்கிய பஞ்சாப் அரசு.! நன்றி தெரிவித்த இந்திய தடகள வீரர்..

Published by
செந்தில்குமார்

இன்று 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைக்கிறார். இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்.8 வரை நடைபெற உள்ளது.

பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் இதற்கான தொடக்கவிழா நடைபெறுகிறது. இந்த விளையாட்டு அரங்கில் 80,000 பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய இருக்கைகள் உள்ளது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது.

சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன.

ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதில் 48 வீரர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதனால் முதல்வர் பகவந்த் சிங் மானின் அறிவுறுத்தலின் பேரில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாபின் 58 வீரர்களுக்கு மொத்தம் ரூ.4.64 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.8 லட்சம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கிய பஞ்சாப் அரசுக்கு இந்திய தடகள வீரர் தஜிந்தர் டூர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளுக்காக 8 லட்சம் ரூபாய் வழங்கிய பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் அரசு வழங்குவது இதுவே முதல்முறை.” என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

13 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

14 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

14 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

15 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

17 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

18 hours ago