லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ பேப்பர்;1 மில்லியன் டாலருக்கு ஏலம் – காரணம் என்ன தெரியுமா?..!

Published by
Edison

பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றபோது,லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ பேப்பர் 1 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று விலகினார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா அணியில் இருந்து விடைப்பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்த மெஸ்ஸி, “இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை”,என்று கண்ணீர் மல்க பேசினார். இதனால், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அப்போது அவர் கண்ணீரை துடைக்க டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தினார்.

இதனையடுத்து,அவர் பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்துசென்று Meikeduo என்ற இணையதளத்தில்,அந்த டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் டி.என்.ஏ பதிவாகி உள்ளதால் அதை வைத்து க்ளோனிங் முறைப்படி மெஸ்ஸியின் திறமைகள் கொண்ட இன்னொருவரை உருவாக்க முடியும் என ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 1 மில்லியன் டாலருக்கு ஏலத்திற்கு விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விளம்பரம் சர்வதேச ஏல இணையதளத்தில் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் இதுவரை இது யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாக, விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,பிஎஸ்ஜி அணிக்காக விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago