டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா,வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் உக்ரேனின் மார்கரிட்டா பெசோட்ஸ்காவை,இந்திய வீராங்கனை மனிகா பத்ரா எதிர்கொண்டார்.முதலில் இரண்டு ஆட்டங்களில் சரிவை சந்தித்த நிலையில்,பின்னர்,மூன்றாவது ஆட்டத்தை 11-7 என்ற கணக்கில் வென்றார்.இதனையடுத்து ,நான்காவது ஆட்டத்தில் ஒரு புள்ளியை பெற தவறி மீண்டும் தோல்வியை தழுவிய நிலையில்,ஏழாவது ஆட்டத்தில் மார்கரிட்டாவை வீழ்த்தி,இறுதியில் 4-3 (4-11, 4-11, 11-7, 12-11, 8-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக,சனிக்கிழமையன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்த்து 4-0 (11-7, 11-6, 12-10, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 26 வயதான மனிகா பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…