ஒரே ஓவரில் W, W, W, W, WD, 1, W ஐந்து விக்கெட் வீழ்த்தி மிதுன் சாதனை..!

Published by
murugan

இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் 5  பிரிவுகளாக அணிகளை பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்  A பிரிவில் இடம் பெற்ற கர்நாடகா அணியும் , D பிரிவில் இடம் பெற்ற ஹரியானா அணியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் ஹரியானாஅணி பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஹரியானா பின்னர் விக்கெட்டை வரிசையை கொடுத்தது.
இதனால் ஹரியானா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரராக கே .எல் ராகுல் ,தேவதூத் பாடிக்கல் இருவரும் அதிரடியான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
இறுதியாக கர்நாடக அணி 15 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தமிழக அணியுடன் , கர்நாடக அணி மோத உள்ளது.
இப்போட்டியில் ஹரியானா அணி விளையாடும் போது 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து இருந்தது. பின்னர் கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன் கடைசி ஓவரை வீசினார்.
கடைசி ஓவரில் மட்டும் அபிமன்யு மிதுன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஒரு 5 விக்கெட் வீழ்த்தி வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் ராஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹாசரே ஆகிய 3 உள்ளூர் தொடர்களிலும் ஹட்ரிக் விக்கெட்  எடுத்த வீரர் என்ற சாதனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

1 hour ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

1 hour ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

2 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

3 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

5 hours ago