இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது? – தலைமை செயல் அதிகாரி விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு போட்டி நடைபெறுமா என்று கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஆனால், தற்போது ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருப்பதால் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அனைத்து நாட்டு வீரர்களையும் ஒன்றாக சேர்க்கும் போட்டியில் ஐபிஎல் போட்டி சிறப்பானது. தேர்தலில் ஓட்டுபோட்ட மக்களை விட அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை பார்த்து இருக்கிறார்கள். ஸ்பான்சர் விஷயத்தில் கிரிக்கெட் தான் முன்னிலையில் இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் வந்து விளையாடுவது தான் ஐ.பி.எல். போட்டியின் தனி சிறப்பாகும். அது தொடரவேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள். இதுகுறித்து படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். 

மேலும், ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. இதனால் போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் எடுக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும். குறிப்பாக அரசின் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று கூறியுள்ளார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிந்ததும், பருவ மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தொடங்கி விடும். இதனால், மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கு முன்னதாக தற்போதைய நிலைமையில் இருந்து விரைவில் முன்னேற்றமடையும் என்று நம்புகிறோம். அதற்கு தகுந்தபடி எங்களது அணுகுமுறை அமையும் என தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

4 minutes ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

1 hour ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

2 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago