கோப்பை யாருக்கு..? இன்று இந்தியா – தென்னாபிரிக்கா மோதல்…!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும்.

இரண்டாவது போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் பேட்டிங்கில் மீண்டும் தவறு செய்ய கூடாது என்பதற்காக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் விளையாடும் லெவனில் மாற்றங்களைச் செய்யலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பார்லில் அமைந்துள்ள போலண்ட் பார்க் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும். இந்த மைதானத்தில் கடந்த 8 ஒருநாள் போட்டிகளில் 5ல் 250 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. போலன்ட் பார்க் மைதானத்தில் மொத்தம் 15 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணி 8 போட்டிகளிலும், சேஸிங் அணி 6 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்த 353 ரன்களே இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்னாக உள்ளது.

பார்லில் இந்தியாவின் ஒருநாள் சாதனை:

பார்லில் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2ல் வெற்றியும், அதே எண்ணிக்கையில் தோல்வியும் கண்டுள்ளது. ஒருநாள் போட்டி டை உள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக 351 ரன்கள் உள்ளது. 2001ல் கென்யாவுக்கு எதிராக இந்தியா இந்த ஸ்கோரை அடித்திருந்தது.

Recent Posts

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

27 minutes ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

45 minutes ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

1 hour ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

2 hours ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

2 hours ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

11 hours ago