2020 உலகக்கோப்பை நடைபெறுமா..? இல்லையா..? மீண்டும் ஐ.சி.சி ஆலோசனை.!

Published by
murugan

 ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  நடத்துவது  சாத்தியல்லை என சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இதனால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால்  ஐ.சி.சி. இது குறித்து பேசாமல் மவுனம் காத்து வருகிறது. கடந்த 2 மாதங்களில்  மூன்று முறை ஐ.சி.சி. ஆலோசனை நடத்தியது. அப்போது, உலக கோப்பை  போட்டி குறித்து அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.

இந்நிலையில்,  இன்று  மீண்டும் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் உலக கோப்பை போட்டி நடத்துவதா..? அல்லது தள்ளிவைப்பதா..? என்பது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற இருந்த 13-வது ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால்  ஐ.பி.எல் நடத்துவது குறித்து முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

35 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

56 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago