2020 உலகக்கோப்பை நடைபெறுமா..? இல்லையா..? மீண்டும் ஐ.சி.சி ஆலோசனை.!

Published by
murugan

 ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  நடத்துவது  சாத்தியல்லை என சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இதனால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால்  ஐ.சி.சி. இது குறித்து பேசாமல் மவுனம் காத்து வருகிறது. கடந்த 2 மாதங்களில்  மூன்று முறை ஐ.சி.சி. ஆலோசனை நடத்தியது. அப்போது, உலக கோப்பை  போட்டி குறித்து அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.

இந்நிலையில்,  இன்று  மீண்டும் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் உலக கோப்பை போட்டி நடத்துவதா..? அல்லது தள்ளிவைப்பதா..? என்பது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற இருந்த 13-வது ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால்  ஐ.பி.எல் நடத்துவது குறித்து முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago