உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் அன்ஷு மாலிக்…!

Published by
Edison

மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நார்வேயின் ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அரையிறுதி போட்டியின் 57 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான(20 வயதான) இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் பங்கேற்று,ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன் சோலோமியா வின்னிக்கை 11-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன்மூலம்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை அன்ஷு படைத்துள்ளார்.

உலக அளவில் நான்கு இந்திய மல்யுத்த வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.(கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018) மற்றும் வினேஷ் போகட் (2019) – வெண்கலம் வென்றனர்).

இந்நிலையில்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அன்ஷு தகுதி பெற்றுள்ளார்.இதில் வெற்றி பெற்றால்,2010 இல் சுஷில் குமாருக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராகம் வாய்ப்பு அன்ஷுவுக்கு உள்ளது.

மேலும்,இது தொடர்பாக அன்ஷு கூறுகையில்:”இது மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டோக்கியோ விளையாட்டில் என்னால் செய்ய முடியாததை நான் இங்கு செய்தேன். எனது கடைசி போட்டியாக நினைத்து ஒவ்வொரு போட்டியிலும் நான் போராடினேன்.

இதற்காக நான் கடுமையாகப் பயிற்சி பெற்றேன், நான் எனது 100 சதவிகிதத்தை கொடுக்க விரும்பினேன்,எனது கடைசி போட்டியைப் போல இறுதிப் போட்டியில் போராடுவேன்,” என்று அவர் கூறினார்.

இதனையடுத்து,அன்ஷூ மாலிக்,இன்று மாலை நடைபெறும் இறுதிச் சுற்றில், 2016 ஒலிம்பிக் சாம்பியனான ஹெலன் மாரூலிஸை எதிர்கொள்கிறார்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago