கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். அவர் கூறியுள்ள அறிக்கையில், ஒரு பிரதமராக இந்த சமயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. எனவே,தெளிவான விதிமுறைகளும் ஊரடங்கு உத்தரவுகளும் தான் ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவையும் அவசியமும் ஆகும். மேலும், நாம் இதர நாடுகளின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உடல்நலன் தான் தற்போதைய முக்கிய தேவையாகும். ஒருவர் ஷாப்பிங் மையத்துக்குச் சென்று புதிய […]