நமது நாட்டில் அர்ப்பணிப்போடு, தன்னலம் பாராது, பிறர்நலம் விரும்பி வேலை செய்பவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டித்துரை (26) எனும் இளைஞர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்நிலையில், வேலையைவிட்டு வருமாறு பாண்டித்துரையிடம் அவரது தந்தை உருக்கமாக பேசுவதும், அதற்கு ‘சமூக நலனே முக்கியம் நான் வேலையை விட்டு வரமாட்டேன்’, என பாண்டித்துரை பதிலளிப்பதுமான ஆடியோ பதிவு இணையத்த்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், பாண்டிதுரையின் தந்தை, ‘இந்த […]
இராமநாதபுரம் மாவட்டம் அழகர்குளம் கிராமத்தை சேர்ந்த நயினார் முகமது என்பவரின், மகன் முகமது அமீர் (13). இவருக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இடதுகால் செயலிழந்ததோடு, தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மதுரை மருத்துவமனை சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரித்த நிலையில், அந்த சிறுவனை ராமநாதபுரம் மருத்துவமனையில், அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை உடனடியாக, மேல் சிகிச்சைக்காக […]