இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) எனும் கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. நீண்ட வருடங்களாக பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரயில் கடத்தல், பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் என தாக்குதல் நடத்தி வந்த BLA அமைப்பு நேற்று நடத்திய 2 தாக்குதல்களில் […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள […]
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army – BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின் எட்டு இராணுவ வாகனங்களை தாக்கியதாகவும், இதில் 90 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானின் மஜீத் பிரிகேடு (Majeed Brigade) என்ற தற்கொலைப் பிரிவு, ஆர்.சி.டி நெடுஞ்சாலையில் உள்ள ரக்ஷன் மில் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை (VBIED) பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பேருந்து முழுமையாக அழிக்கப்பட்டு, […]
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரயிலை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடத்தி சென்ற அந்த பயணிகளில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, இதுவரை 190 பயணிகள் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், […]
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று முன் தினம் போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியது. தற்பொழுது இந்த கடத்தல் சம்பவத்தில், பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. ஒரு தகவலின்படி, 346 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 28 பாக்ஸ்தான் ராணுவ வீரர்களும், 21 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இந்த சம்பவ […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார் 500 பயணிகளுடன் வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயிலை பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) போலன் மாவட்டத்தில் வைத்து கடத்தியது. இவர்களில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. பயணிகளை பணய கைதிகளாக BLA […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைத்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் தடைசெய்யப்பட்ட BLA கிளர்ச்சியாளர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 500 பயணிகள் : BLA கடத்திய பயணிகள் […]
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரியவந்தது. மேலும், காயமடைந்தோரில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது மேலும் 5 பேர் பரிதமபாக உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிலும், சிகிச்சை பெற்று […]
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தாக்காததால் அங்கிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதளாக இருக்கலாம் என […]
பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் […]
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இருந்தாலும் வளர்ச்சியடையாத பலுசிஸ்தான் பகுதியாகவே உள்ளது.இங்குள்ள ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.