மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவை) காலியாக உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்த இடைத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]
உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் ரூ.2577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து அவருகிறார். அப்போது, […]