சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 30 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகத்தினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில், இருதரப்பும் ஏற்றுக்கொண்டவாறு பின்வரும் […]