தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பம் அத்துமீறினால்.. கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!

Published by
மணிகண்டன்

AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தொழில்நுட்பத்தின் தாக்கம் தற்போது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதன் வரவு காரணமாக வேலைப்பளூ குறைக்கப்படுவதாக கூறினாலும் அதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் AI தொழில்நுட்பத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் ரீஜிவ் சந்திரசேகர் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு AI தொழில்நுட்பம் ஒழுங்குபடுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் இணையவாசிகள் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் கூட்டாக இணைந்து செய்லபட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

8 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

8 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

9 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

9 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

10 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

12 hours ago