UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர். யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், […]
இந்திய அரசாங்கம் சமீபத்தில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அந்தந்த பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து பேட்டில் க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா (BGMI) கேமை அகற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அகற்றப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் பிஜிஎம்ஐ தடை செய்யப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி மொபைல் மற்றும் டிக்டோக் தடை செய்யப்பட்டது. செயலி செய்யப்பட்ட காரணத்தை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை. […]
இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம், புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. பயனர்கள் இப்போது ரயில் வரும் நடைமேடை எண் மற்றும் ரயிலின் நேரலை இருப்பிடத்தையும் சரிபார்க்கலாம் என்றும் பேடிஎம் கூறுகிறது. லைவ் ட்ரெயின் ஸ்டேட்டஸ் அம்சத்துடன், ரயில் பயணத்திற்கான அனைத்து முன்பதிவுக்குப் பிந்தைய தேவைகளையும் பயனர்கள் இப்போது சரிபார்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. பேடிஎம் ஐப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR மற்றும் ரயில் நிலையைப் […]
இன்ஸ்டாகிராம் செயலி புதிய வசதியை சோதனைக்கு உட்படுத்தியது. ஆனால் அது சரிவாராத காரணத்தால் அதனை திரும்ப பெற்றுள்ளது. இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும், அதிகமாக மூழ்கி கிடக்கும் சமூக வலைத்தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். முதலில், போட்டோ, சிறிய வீடியோ மட்டும் நல்ல தரமான தரத்தில் கொடுத்ததால் பலரையும் கவர்ந்தது. அதற்கடுத்ததாக, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி ஹிட்டடித்துள்ளது. அதற்கடுத்து அவ்வப்போது, புதிய வசதிகளை அப்டேட் […]
நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி. இந்த செயலி மறு உருவாக்கம் […]
மூன்றாம் தர குக்கீஸ்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூகுள் குரோம் ஆரம்பித்தது. ஆனால், அதன் பணிகளை தற்போது தற்காலிகமாக கூகுள் நிறுத்தி வைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தற்போது தனது முக்கியமான வேலையை தாமதப்படுத்தியுள்ளது. அதாவது, கூகுள் குரோம் மூலம் நாம் ஏதேனும் தேடும் பொழுது சில மூன்றாம் தார குக்கீஸ் எனப்படும் சில தேவையற்ற தரவுகள் நமது போனில் சேமிக்கப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் அது அதிகமாகி விடும். அதனால், நாம் தனியே அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். […]
ஒரு தெருவை 360 டிகிரியில் பார்த்துக்கொள்ள முடியும் அளவுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் மேப் நிறுவனம். முன்பெல்லாம், தெரியாத ஒரு ஊருக்கோ, தெருவுக்கோ செல்ல வழி தெரிந்த நபர்களிடம் வழி கேட்டு செல்வோம், ஆனால், தற்போதெல்லாம், ஒரு ஸ்மார்ட் ஃபோன் மற்றும், ஒரு கூகுள் மேப் அப்பிளிக்கேஷன் போதும் என்கிற நிலைமை வந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. அதனை அவ்வப்போது மெருகேற்றி கொண்டே கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தியேட்டர், முக்கிய வழிபட்டு […]
54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞர் முதல் பெரியவர்கள் வரை, சினிமா பிரபலங்கள் முதல் பெரிய பெரிய அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில், பலரும், ஒரு செய்தியை, தங்களது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் சமூக வலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான். இப்படி இருக்க, சமீப காலமாக ஹேக்கர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது. அப்படி தான் அண்மையில், 54 லட்சம் […]
கூகுள் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள LaMDA AI வசதி பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஒரு மென்பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளனர். கூகுள் நிறுவனம் புதியதாக LaMDA AI எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை நாம் தவறாக கூகுளில் தேடினாலும், அது சரியாக புரிந்துகொள்ளப்பட்டு, கூகுள் நமக்கு தேவையானதை கொடுத்துவிடும். அதே போல வசதியை நாம் பேசும் போதும் தவறாக, அல்லது பேச்சுநடையில் பேசியதை சரியாக புரிந்து கொண்டு நமக்கு உதவி புரிய தான் LaMDA […]
சமீபத்தில், கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler, அதன் ThreatLabz குழு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜோக்கர், ஃபேஸ்டீலர் மற்றும் காப்பர் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட பல ஆப்ஸ்-களை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை உடனடியாக கூகுளின் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி குழுவுக்குத் தெரிவித்ததுடன், அவை உடனடியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இத்தகைய தீங்கிழைக்கும் ஆப்ஸ்-களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க, உங்கள் Android மொபைல்களில் தேவையற்ற, நம்பிக்கையற்ற மற்றும் சரிபார்க்கப்படாத ஆப்-களை பதிவிறக்க வேண்டாம். உங்கள் மொபைலில் வைரஸ் […]
இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ பயன்படுத்தி சிறு வணிகங்களிலிருந்து பொருட்கள் வாங்கலாம். இன்ஸ்டாகிராம் மக்களை இணைக்க உதவுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இனி இன்ஸ்டாகிராம் சேட் பக்கத்தில், மெட்டா பே மூலம் பணம் செலுத்தவும், தங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும் மற்றும் ஆர்டர் குறித்து […]
தற்போது இருக்கும் காலத்தில் ஆறாம் விரலாக எப்போதும் நம் கையில் இருக்கும் மொபைல் போன்கள் பல வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் பல பிரச்சனைகளை விளைவிக்கின்றது. குழந்தைகளும் இளம்வயதினரும் டிக்டாக், யூடூயூப் போன்ற செயலிகளில் அதிக நேரம் செலவிடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும்,அதற்கு மாற்று என்று சொல்லும் பல செயலிகளும் நம் குழந்தைகளை அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. சீனாவின் வீடியோ செயலி டிக்டாக் ஜூன் 2016 இல் தொடங்கப்பட்டது , இந்த […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]
வாட்ஸ்அப் தனது பயனர்களின் தேவையை மேம்படுத்தவும் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அம்சங்களைச் செயல்படுத்தி வருகிறது.டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது புதிய அம்சங்களால் முன்னிலை வகித்து வருகிறது. உடனடி-செய்தி அனுப்பும் தளத்தில் அதாவது வாட்ஸ் ஆப் பயனர் தேவையை மேம்படுத்தவும்,ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அப்டேட்களை மேற்கொண்டு வரும் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது பிடியைத் தக்கவைப்பதற்க்காக […]
அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது. சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் […]
ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றன. மக்களில் சுமார் 75% பேருடைய மொபைல் போன்களில் ஜிமெயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிமெயில் நிறுவனம் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆஃப்லைன் சேவையை பயன்படுத்தி, இணைய வசதி […]
உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்(மெட்டா) நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிடுகிறது.இந்நிலையில்,உங்கள் சுயவிவரப் படம்(profile picture) உள்ளிட்ட தகவல்களை மறைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது ப்ரைவசி அம்சம் மூலம் status,about ஆகியவற்றை மட்டுமே யார் பார்க்கலாம் என்று நிர்ணயித்து வந்த நிலையில்,தற்போது profile picture யார் யாருக்கு தெரியும்படி வைக்கலாம், last seen-ஐ யார் […]
உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்னதாக இந்த வசதி Android மற்றும் iOS மொபைல் போன்களில் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மேலும்,புதுப்பிக்கப்பட்ட […]