இந்தியா முழுவதும் உள்ளூர் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்காக ஜஸ்ட்டியலை (Just dial) நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிலதிபரும்,பில்லியனருமான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனம், ஜஸ்ட்டியல் (ஜே.டி) நிறுவனத்தை அதன் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ .5,920 கோடி முதல் 6,660 கோடி ($ 800-900 மில்லியன்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வாங்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான,முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ள ஜஸ்ட்டியல் குழு கூட்டத்தில் வெளியிடப்படலாம் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குழு,கெட்டர் (GETTR) என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குழுவினரால் தொடங்கப்பட்ட புதிய சமூக ஊடக தளமான கெட்டர்(GETTR) ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கெட்டர் ஆனது “ரத்துசெய்யும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது,பொது அறிவை ஊக்குவித்தல், சுதந்திரமான பேச்சைக் காத்தல், சமூக ஊடகங்களை சவால் செய்தல் மற்றும் கருத்துக்களின் உண்மையான சந்தையை உருவாக்குதல்” போன்றவைகள் மூலமாக தனது பணி அறிக்கையை விளம்பரப்படுத்தியது.ட்ரம்பின் முன்னாள் செய்தித் […]
லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரால் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, லிங்க்ட்இன் தளத்தில் 756 மில்லியன் பயனர்கள் இருப்பதால்,அதில் சுமார் 92 சதவீத லிங்க்ட்இன் பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுள்ளதாகவும், அதில் அவர்களின் தொலைபேசி எண்கள்,முகவரிகள், இருப்பிடம் மற்றும் ஊகிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தரவுகள் உள்ளன […]
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் […]
டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் திடீரென்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் […]
சமூக வலைதளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் போலி படங்கள் போன்றவற்றை 24 மணி நேரத்தில் நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில்,புதிய விதிகளின்படி,டுவிட்டர்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல் பிரபலங்கள்,தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் படத்துடன் போலி கணக்குகள் தொடங்கியிருப்பது குறித்த புகார் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் 24 […]
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம். இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம் செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூகுள் […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது ஜூன் 18 ம் தேதி வெளியிடப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் […]
கோ-வின் இணைய தளத்தில் உள்ள சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், தரவு கசிந்ததாக வரும் செய்திகள் போலி என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கான ‘கோ-வின்’ இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்த […]
புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,சட்டப்படி செயல்படாவிட்டால்,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்., ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது,சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.மேலும்,இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உலககளாவிய தலைவர்களையும்,அரசியல்வாதிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு, தலைவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது. இதற்கிடையில்,அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால்,அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். இதனையடுத்து,ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான […]
வாட்ஸ்-அப் நிறுவனம் பயனர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் […]
மத்திய அரசின் புதிய ஐ.டி விதிமுறைகளை ஏற்க தயார் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய பதிவை யார் […]
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய […]
ONE PLUS தனது டிஜிட்டல் கட்டண சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ONE PLUS ,கடந்த ஆண்டு முதல் சீனாவில் தனது சொந்த டிஜிட்டல் கட்டண சேவையை வழங்கியுள்ளது.அதற்கு ONE PLUS PAY என்று பெயர் வைத்துள்ளது.மேலும் ONE PLUS நிறுவனம், இந்த சேவையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விரைவில் கொண்டு வரும் என்று தெரிவிக்கிறது. One Plus Pay சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வமான சான்றிதழ் பற்றிய […]
நமது போனில் உள்ள தரவுகளை திருடும் நெட்ஃபிலிக்ஸ் குளோன். மக்கள் தங்களது நேரத்தை செலவிட பொழுதுபோக்கும் பிரபல செயலியாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் போன்று, குளோன் செயலி உருவாக்கப்பட்டு, பல பிரச்சினைகளுக்கு வழிவகுள்ளது. தற்போது பிளே ஸ்டோரில் இந்த ஒரு புதிய செயலியால், புது பிரச்னை கிளம்பியுள்ளது. அதாவது, நெட்ஃபிலிக்ஸ் குளோனை பயன்படுத்தினால், அது ஒரு பயனரின் வாட்ஸ்அப் செய்திகளை திருடி, பின் வாட்ஸ்அப் செய்திகளுக்கு தானாக பதில் அளித்து அதன் மூலம் தன்னை பரப்பிக் […]
உலகளவில் 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதித்த பேஸ்புக் தகவல் மீறலில், உங்கள் பேஸ்புக் கணக்கும் உள்ளதா என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது? சமீபத்தில், உலகளவில் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் போன்ற பிற தகவல்கள் ஆன்லைனில் இலவசமாக கசிந்தன. ஆகவே,தகவல் மீறல்களைக் கண்காணிக்கும் இணையதளமான ‘ஹேவ் ஐ பீன் ப்வென்ட்’ என்ற டார்க் வெப் வழியாக உங்கள் கணக்கை சரிபார்க்க நீங்கள் அணுகாவிட்டால், பேஸ்புக்கிலிருந்து உங்கள் […]
உலகளவில்,ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து PUBG LITE செயல்படாது.இதனால் லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் சோகத்தில் மூழ்கினர். உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான லவுன்லோட் செய்யப்பட்ட PUBG-யானது இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. PUBG வீடியோகேம் ஆப்பை டவுன்லோட் செய்ய மொபைலில் 1GBக்கும் அதிகமான RAM வசதி தேவைப்படும்.எனவே RAM வசதி குறைவாக உள்ள மொபைல் போன்களுக்காக 2019 இல் PUBG lite அறிமுகப்படுத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் PUBG lite ஆனது ஏப்ரல் 29 […]
உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக் க்கு சொந்தமான மெசேஞ்சர், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியது. தடை ஏற்பட்டவுடன் பயனர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர் தங்களுக்கு வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் ஆகியவைகள் முற்றிலுமாக தடை பட்டுள்ளதாகவும்,எந்தவித செய்திகள் மற்றும் புகைப்படம் வீடியோக்களை பகிர முடியாமல் உள்ளதாக ட்வீட் செய்தனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்தக் குறைபாடானது சரி செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் ஏன் இந்த […]