elon musk [Image source : file image ]
வாட்ஸ்-அப்பை போலவே, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிவிட்டரை அதிகமானோர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் உபயோகம் செய்து வருகிறார்கள்.
இந்த டிவிட்டரில் மற்றவர்களுடன் பேசுவதற்கு மெசேஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. ஆனால், பயனர்கள் கால் செய்து பேசும் வசதி இல்லை. ஆனால், அதற்கு இனிமேல் கவலை வேண்டாம். ஏனென்றால், அதற்கான வசதிகள் விரைவில் வரவுள்ளதாக டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” டிவிட்டரில் இனிமேல் குரல் மற்றும் வீடியோ கால விரைவில் வரும், எனவே உங்கள் ஃபோன் எண்ணைக் கொடுக்காமலேயே உலகில் எங்கிருந்தாலும் அவர்களிடம் பேசலாம்” என அறிவித்துள்ளார்.
இனிமேல் டிவிட்டரிலும் குரல் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி வருவதால் பயனர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய கணக்கை நீக்கம் செய்யப்பட போவதாக எலான் மஸ்க் இதற்கு முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…