Grok AI [Image Source : TS2 Space]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸில் இருக்கும் எக்ஸின் மெனுவில் இந்த க்ரோக் ஏஐ சாட்போட்டை காணலாம்.
முன்னதாக அமெரிக்காவில் உள்ள பிரீமியம்+ சந்தாதாரர்களுக்கு க்ரோக் ஏஐ அம்சம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சாட்போட் கிடைக்கிறது. இது X.AI ஆல் உருவாக்கப்பட்ட Grok-1 எனப்படும் AI மாடலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது.
எனவே கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி போன்ற மிகவும் பிரபலமான சாட்போட்களுடன் ஒப்பிடும்போது க்ரோக் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. மற்ற சாட்போட்கள் பதிலளிக்கத்தவரும் கேள்விகளுக்கு இந்த க்ரோக் பதிலளிக்கும் என்று கூறப்படுகிறது. இது எக்ஸில் இருந்து நிகழ்நேர தகவல்களைப் பெற்று அதிலிருந்து பதிலளிக்கிறது.
ஆனால் இதற்கு நேர்மாறாக கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி ஆகியவை இணையத்தில் உள்ள தகவல்கள், புத்தகங்கள் மற்றும் விக்கிபீடியா போன்றவற்றிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து நமக்குத் தருகிறது. மேலும், இந்தியாவில் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு மாதம் ரூ. 1,300 செலவாகும். அதுவே வருடத்திற்கு ரூ.13,600 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…