தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்-ன் புதிய அம்சம்..! கொண்டாடும் IOS பயனர்கள்..!

வாட்ஸ் அப், ஐஓஎஸ் (IOS) பயனர்களுக்காக தேதி மூலம் செய்திகளைத் தேடும் அம்சத்தை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ் பயனர்களுக்கான தற்போதைய அப்டேட்டில் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் அவர்களுக்கு தேவையான செய்தியை தேதி வாரியாக தேட முடியும். இதுவரை பயனர்களுக்கு முக்கிய வார்த்தைகள் மூலம் செய்திகளைத் தேடும் அமைப்பு மட்டுமே இருந்தது. இந்த அம்சம் மட்டுமல்லாமல் மற்றொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் படங்கள், வீடியோக்கள் […]

2 Min Read
Default Image

ஒரிஜினல் தரத்துடன் புகைப்படங்களை அனுப்ப, விரைவில் வாட்ஸ்அப் அனுமதி! வெளியான தகவல்.!

வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் புகைப்படங்களை அசல் தரத்துடன் பயனர்கள் அனுப்ப அனுமதிக்கிறது. உலகின் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும், செய்திகளை பகிரும் மெட்டாவின் வாட்ஸ்அப், செயலியானது பயனர்கள் அனுப்பும் புகைப்படங்களை அசல் தரத்துடன் அனுப்புவதற்கு விரைவில் அனுமதிக்கவிருக்கிறது. அதற்கான புதிய அம்சத்திற்கான செயல்பாடுகளில் வாட்ஸ்அப் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்அப்பில் இதுவரை நாம் அனுப்பும் புகைப்படங்கள், ஒரிஜினல்(அசல்) தரத்தில் இல்லாமல், அதன் அசல் தரம் குறைந்த அளவிலான புகைப்படம் மட்டுமே அனுப்பப்படுவது நடைமுறையில் இருக்கிறது. வெகுநாட்களாக பயனர்களின் குறையாக […]

3 Min Read
Default Image

12,000 பேரை பணியிலிருந்து நீக்கும் கூகுள் நிறுவனம்.!

கூகுள் நிறுவனம் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பிரபலமான தேடுபொருள் நிறுவனமான கூகுள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, அதன் அடிப்படையில் கூகுளின் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அவர்களுக்கு நாங்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய சுந்தர் பிச்சை, வேலைகளை குறைக்கும் முடிவுக்கு மன்னிப்பு கேட்டு முழு பொறுப்பையும் தான் ஏற்பதாகக் கூறினார். அவர் அனுப்பிய […]

3 Min Read
Default Image

ட்விட்டரில் நீல நிற சந்தாதாரர்! ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் 11 டாலர்.!

ட்விட்டரில் நீல நிறச்சந்தாதாரர் முறைக்கு, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் $11 டாலர் என அறிவித்துள்ளதாக தகவல். ட்விட்டர் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, ட்விட்டர் ப்ளூ சந்தாவை மாதத்திற்கு $11 என, விலை நிர்ணயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் ப்ளூ சந்தா, மாதம் 11 டாலர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதே விலையும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் நிர்ணயம் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. ட்விட்டரின் இணையவழி பயனர்களுக்கு, ட்விட்டர் ப்ளூ சந்தாவை மலிவான வருடாந்திர […]

2 Min Read
Default Image

சாட்GPT ஆபத்தானது, நான் 45 நாட்களாக தூங்கவில்லை- கோர்செரா சிஇஓ

சாட்GPT ஆரம்பமானது மற்றும் ஆபத்தானது, நான் 45 நாட்களாக தூங்கவில்லை என கோர்ஸ்ராவின் சிஇஓ கூறியுள்ளார். உலகெங்கும் தற்போது மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் சாட்GPT செயற்கை நுண்ணறிவு(AI) குறித்து, அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் கோச்சிங் தளமான கோர்ஸ்ரா(Coursera) வின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ)  ஜெஃப் மாகியான் கால்டா, சாட்GPTயால் தான் 45 நாட்களாக இரவில் விழித்திருப்பதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் சாட்GPT(AI) பயன்படுத்தி வருகிறேன், இதன் மூலம் புதிய விஷயங்களை உருவாக்க முடியும். […]

2 Min Read
Default Image

மின்னலை திசை திருப்பிய ராட்சத லேசர்.. விஞ்ஞானிகள் சாதனை..!

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் தடுக்க முடியும் என்றும்  விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஐந்து டன் எடையுள்ள இந்த சாதனம் சுவிட்சர்லாந்தின் சாண்டிஸ் மலை பகுதியில் உள்ள […]

3 Min Read
Default Image

இன்ஸ்டாகிராம் மக்களை சோகமடைய செய்கிறது..! எலன் மஸ்க்

இன்ஸ்டாகிராம் பயணர்களை மனசோர்வடைய செய்கிறது என்றும் ட்விட்டரானது பயனர்களைக் கோபமடையடைய செய்கிறது என்றும் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டிற்கு மஸ்க்கை பின் தொடருபவர்களில் பலர் பதிலளித்திருந்தனர். அவர் செய்த ட்வீட்டில், “இன்ஸ்டாகிராம் மக்களை மனச்சோர்வடையச் செய்கிறது மற்றும் ட்விட்டர் மக்களை கோபப்படுத்துகிறது. எது சிறந்தது?” என்று கேட்டிருந்தார். அதாவது மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் பயனர்களை சோகமடையச் செய்வதாகவும் தனது ட்விட்டர் தளம் பயனர்களை கோபப்படுத்துகிறது […]

3 Min Read
Default Image

சசி தரூர் ஸ்டைலில், லீவ் லெட்டர் கேட்ட நபர், சாட் GPTயின் பதில் வைரல்.!

சசி தரூர் ஸ்டைலில், தனக்கு லீவ் லெட்டர் எழுதுமாறு கேட்ட நபருக்கு, சாட் GPT அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாட் GPT(ChatGPT), தற்போது உலக மக்களிடையே வைரலாகி வரும் ஒரு AI வகை சாட் பாட்(CHAT BOT) ஆகும், பயனர்கள் பலரும், சாட் GPTயுடன் மேற்கொண்ட வேடிக்கை உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் நிஷாந்த் விஜயன் என்ற ட்விட்டர் பயனர், தனது சிறிய பரிசோதனையை ஸ்கிரீன்ஷாட்டுடன் பகிர்ந்துள்ளார். நிஷாந்த் […]

3 Min Read
Default Image

2027-க்குள் உலகின் 50% ஐபோன்களை இந்தியா உற்பத்தி செய்யும் புதிய ஆய்வு

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் புதிய அறிக்கையின் படி , இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 2027 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயரும், தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் எனவும், கடந்த ஆண்டு உலகளவில் 85 சதவீத ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டன ஆனால் , அமெரிக்கா-சீனா துண்டிப்பு நடவடிக்கைகளால் ஆப்பிள் சாதனங்களுக்கான உற்பத்தி மையமாக அதன் […]

3 Min Read
Default Image

இன்ஃபோசிஸ் இயக்குநராக, 5 ஆண்டுகளுக்கு கோவிந்த் ஐயர் நியமனம்.!

இன்ஃபோசிஸ் நிறுவனம், கோவிந்த் ஐயரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுதந்திர இயக்குநராக நியமித்துள்ளது. ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட், கோவிந்த் வைத்திராம் ஐயரை நிறுவனத்தின் கூடுதல் மற்றும் சுதந்திரமான இயக்குநராக நியமித்துள்ளது. இன்ஃபோசிஸ் வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோவிந்த் வைத்திராம் ஐயரை, இயக்குநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்க இன்ஃபோசிஸ் ஒப்புதல் அளித்துள்ளது. கோவிந்த் வைத்திராம் ஐயர், இன்று ஜன-12 முதல் இயக்குனராக பணியை தொடங்குவார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தது. கோவிந்த் […]

2 Min Read
Default Image

ஆப்பிள் 2025 இல் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிடஉள்ளது- தகவல்

ஆப்பிள் நிறுவனமானது 2025இல் அதன் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அதன் மேக்புக் மடிக்கணினிகளில் தொடுதிரை அம்சத்தை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆப்பிளின் பொறியாளர்கள், இந்த திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில், அதன் புதிய மேக்புக் ப்ரோவை(MacBook-Pro) அறிமுகப்படுத்தலாம், என்றும் இது ஒலெட்(OLED) தொடுதிரை அம்சம் கொண்ட ஆப்பிளின் முதல் மேக் ஆக […]

2 Min Read
Default Image

வெகு விரைவில் இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய முடியாது.! அதிரடி முடிவு.!

பிப்ரவரி முதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வேறு ஷாப்பிங் தளம் செல்லும் வசதி நிறுத்தி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் அவ்வப்போது தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, ஷாப்பிங் தளங்களின் விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வரும் அதனை நாம் கிளிக் செய்தால், அது அந்த ஷாப்பிங் தளத்தின் பக்கம்  சென்றுவிடும் . நேற்று இன்ஸ்டாகிராம் தரப்பில் கூறுகையில், பிப்ரவரி 2023 முதல் […]

2 Min Read
Default Image

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, விதிகளைப் பின்பற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல்.,!

தொலைக்காட்சி நிறுவனங்கள் கண்ணியத்துடன் செயல்படுமாறு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிடும்போது, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, குறிப்பாக விபத்துகள், இறப்புகள், மற்றும் பெண்கள் குறித்த வன்முறை போன்ற அதிக உணர்ச்சிபூர்வமான செய்திகளை வெளியிடும் போது கண்ணியத்துடன் வெளியிடுமாறு கூறப்பட்டுள்ளது. பல நேரங்களில் வீடியோக்கள், சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு, அப்படியே ஒளிபரப்பப்படுகிறது, இதனால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விதிகளைப் பின்பற்றி செய்திகளை வெளியிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

ஆப்பிள் அறிமுகப்படுத்தும் AI ஆடியோ புத்தகங்கள்!

ஆப்பிள் நிறுவனம், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(AI) விவரித்த ஆடியோ புத்தகங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(AI) வளர்ச்சி உலகில் அடுத்தகட்டத்திற்கு முன்னேறி வருகிறது. உலகில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. இதேபோல் ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் விவரிக்கப்படும் ஆடியோ புத்தகங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிளின் புக்ஸ் பயன்பாட்டின் பயனர்கள், AI Narration என்று தேடினால் டிஜிட்டல் குரல் மூலம் கூறப்படும் மனித விவரிப்பாளரின் […]

3 Min Read
Default Image

20 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

200 மில்லியனுக்கும் (20 கோடி) அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள்(Email Id) திருடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது, 200 மில்லியன் (20 கோடி) ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஆன்லைன் ஹேக்கிங் தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறைந்தது 400 மில்லியன் (40 கோடி) மின்னஞ்சல் […]

3 Min Read
Default Image

சீன சிப்புக்களின் பயன்பாடுகளை நிறுத்தும் டெல்(Dell)..வெளியான தகவல்..!

டெல்(Dell) நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.  2024 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அமெரிக்கா-பெய்ஜிங் பதட்டங்களினால் ஏற்பட்ட கவலைகளுக்கு மத்தியில், டெல் அதன் தயாரிப்புகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் சீன சிப்புகளின் அளவைக் குறைக்குமாறு சப்ளையர்களிடம் கூறியுள்ளது. டெல் நிறுவனம் பயன்படுத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதிரிபாகங்களின் அளவை அர்த்தமுள்ள வகையில் குறைப்பதை தங்களுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று […]

2 Min Read
Default Image

ஆப் ஸ்டோர் விளம்பரங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு, சுமார் 8.5 மில்லியன் டாலர் அபராதம்.!

ஐபோன்களின் ஆப் ஸ்டோர் விளம்பரங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு, பிரான்சில் சுமார் $8.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில், வெளியாகும் தனிப்பட்ட தகவல் சேகரிக்கும் சில விளம்பரங்கள் தொடர்பாக, பிரான்ஸின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பான CNIL, ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் $8.5 மில்லியன்(ஏறத்தாழ ரூ.70கோடி) அபராதம் விதித்துள்ளது. ஐபோன் பயனர்கள் iOS 14.6 ஐப் பயன்படுத்தி, பயனர்களிடமிருந்து முறையான ஒப்புதலைப் பெறாமல் அவர்களின் தகவல்களைச் சேகரிக்கிறது என்று கண்காணிப்புக் குழு கூறியது. போன்களில் உள்ள […]

2 Min Read
Default Image

23.5 கோடி ட்விட்டர்பயனர்களின் விவரங்கள் கசிவு! வெளியான தகவல்.!

23.5 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் மிகப்பெரும் சமூக தளமான ட்விட்டரில் 23.5 கோடி பயனர்களின் தரவுகள் ஹேக்கிங் செய்யப்பட்டு ஆன்லைனில் கசிந்துள்ளது, ட்விட்டர் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பற்றிய விவரங்கள் ஹேக்கிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத மிகப்பெரிய ட்விட்டர் தரவு கசிவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தகவல் கசிவு, 2021 […]

3 Min Read
Default Image

விண்வெளி ஸ்டார்ட்அப்களை மேம்படுத்த, இஸ்ரோவுடன் இணையும் மைக்ரோசாப்ட்.!

இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை மேம்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படவுள்ளது. இந்திய விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் இஸ்ரோ இணைந்து செயல்படவுள்ளது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பில் கலந்து கொண்டபின் இதனை அறிவித்தார். இதன் மூலம் இஸ்ரோவால் குறிப்பிடப்படும் சில விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், “மைக்ரோசாப்ட் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஃபவுண்டர்ஸ் ஹப்” என்ற தளத்துடன் இணைக்கப்படும். […]

4 Min Read
Default Image

செயற்கை நுண்ணறிவு(AI) பொறுத்தவரை இந்தியா தான் நம்பர் 1- மைக்ரோசாப்ட் சிஇஓ புகழாரம்.!

செயற்கை நுண்ணறிவு(AI), என்று வரும்போது இந்தியா தான் முதலிடத்தில் இருப்பதாக சத்யா நடெல்லா கூறியுள்ளார். பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நடெல்லா, தற்போது உலகளவில் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தற்போது உலக அளவில் அதிக மென்பொருள் உருவாக்குனர்கள் என்று பார்க்கும் போது இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலிருந்து அதிக சாப்ட்வேர் என்ஜினீயர்கள் உலகெங்கும் பல முக்கிய நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர், மேலும் இந்தியா, […]

3 Min Read
Default Image