ட்விட்டர் ஊழியர்கள், அலுவலகத்திற்கு சொந்த கழிப்பறை காகிதத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து, ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் சொந்த கழிப்பறை காகிதத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு நகர்த்தியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தில் வாடகை செலுத்துவதைத் தவறவிட்ட மஸ்க், அதன் நான்கு தளங்களை மூடிவிட்டு அனைத்து ஊழியர்களையும் இரண்டு தளங்களுக்கு […]
அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தபடியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். இதன்படி அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் […]
விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதெற்கென அமேசான் தனி ஆப்-ஐ அறிமுகப்படுத்துகிறது. உலகின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம், விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதற்காக அமேசானில் பிரத்யேக ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே அமேசான் ப்ரைம் தளம் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை காண்பிக்கும் தளமாக நடைமுறையில் இருக்கிறது. அமேசான் நிறுவனம் தற்போது நேஷனல் கால்பந்து லீக்கின் கால்பந்து உரிமை மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் போன்ற விளையாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இது […]
இந்தியாவில் மொபைல்களுக்கு USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்க மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் உற்பத்தியாளர்களுக்கு, அனைத்து மொபைல்களிலும், டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக இந்தியாவின் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு, மார்ச் 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2025க்கு பிறகு வெளிவரும் அனைத்து மாடல் மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று என்று நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார். ஐரோப்பிய […]
சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு. பல இடங்களில் சாத்திய தீண்டாமை குறித்த சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் சாதி தீண்டாமை குறித்த விவகாரம் வெளி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், கோயில்களில் அனுமதிக்க மறுத்தல், தேநீர் கடைகளில் இரட்டை […]
டிச-31க்கு பிறகு ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருவதால், சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் அப்டேட்களைப்பெற அந்த மாடலின் சாப்ட்வேர் ஒத்துழைக்காது. இதனால் வாட்ஸ்அப், சில பழைய மாடல் போன்களில் வேலை செய்யாது. இதே போல் இந்த வருடம் டிச-31க்கு பிறகும் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என 49 மாடல் போன்களை வாட்ஸ்அப் […]
சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். 40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை சொந்தமாக வைத்திருப்பதாக ஹேக்கர், ஒருவர் கூறியுள்ளார், மேலும் அதனை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளார். உயர் பதவிகளில் இருக்கும் மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனத்தின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை, சல்மான் […]
தவறான தகவல்களை பரப்பியதற்காக 104 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல்களுக்கு வரைமுறையோ எந்தவித கட்டுப்பாடோ பெருமளவில் வகுக்கப்படவில்லை, இதனால் பல யூடியூபர்கள் போலியான தகவல்களை பரப்புவதற்காக சேனல்கள் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மக்களும் எது சரியான செய்தி என்று அறியாமலே தாங்கள் பார்த்த வீடியோவில் வரும் செய்தி உண்மை என நம்பி விடுகிறார்கள். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி 104 யூடியூப் சேனல்கள் மற்றும் 45 […]
செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா லேண்டர் தனது கடைசி படமாக இது இருக்கலாம் என்று அனுப்பிய படம் வெளியானது. செவ்வாய் கிரகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் 2018இல் நாசா இன்சைட் லேண்டர் விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்டது. இந்த லேண்டர் விண்கலம், நவ-26, 2018இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அன்று முதல் 4 ஆண்டுகளாக லேண்டர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் தன்மை நிலை மற்றும் நிலப்பரப்பு குறித்து ஆய்வு செய்கிறது. My power’s really […]
ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே முக்கிய கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரில் எதிர்கால முடிவு குறித்த முக்கிய கருத்துக்கணிப்புகளில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார். நேற்று மஸ்க், ட்விட்டரில் தான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என கருத்துக்கணிப்பு கேட்டிருந்தார். மேலும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கணிப்பில் 57.5% […]
பயனர்கள் தெரியாமல் அழித்துவிட்ட மெசேஜ்களை, செயல்தவிர்க்க 5 நொடிகள் வரை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த நிறுவனமானது பயனர்களுக்கு அவ்வப்போது சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வருவது வழக்கம். அதுபோல வாட்ஸ்அப்பின் சாட்டில் நாம் தெரியாமல் செய்யும் தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த முறை புதிய அம்சம் வந்துள்ளது. வாட்ஸ்அப்பின் சாட் பகுதியில் பயனர்கள் அனுப்பிய மெசேஜை அழிப்பதற்கு “டெலீட் ஃபார் எவ்ரி ஒன்” என்பதற்கு […]
மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி, தற்போது புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கையெழுத்து என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். அகில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதே தெரியாமல் மருந்து கடைக்காரரிடம் கொடுத்து இருப்போம். அவர்கள் அதனை பார்த்து மருந்துகள் கொடுப்பார்கள். […]
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா என்று அதன் தலைவர் எலான் மஸ்க், பயனர்களிடம் கேட்டுள்ளார். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அந்த கருத்துக்கணிப்பில் தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்று கேட்டுள்ளார். மேலும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ட்விட்டர், எலான் மஸ்க் தலைமையின் கீழ் வந்தபிறகு மஸ்க் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக […]
செயற்கையான கருப்பை வசதியை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம். செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சியின் மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் […]
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை, வணிக நிறுவனங்களுக்கு தங்க நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம், அதன் ப்ளூ டிக் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா சேவை இணையத்தில் பயன்படுத்த $8 மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இல் $11 க்கு என நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வணிகக் கணக்குகளுக்கு தங்க நிற சரிபார்ப்புக் குறியீடு வழங்கபட்டுள்ளது. தற்போது இந்த சேவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் […]
இந்தியாவில் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் இந்தியா முழுவதும், ஆப்பிள் இன்க் தயாரிப்புகளை மட்டுமே விற்கும் சுமார் 100 பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும் ஆப்பிள் முன்னணி விற்பனையாளர் ஸ்டார்களை(1000 சதுர அடி) விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியின்படி, ஆப்பிள் நிறுவனம் டாடாவுக்குச் சொந்தமான இன்பினிட்டி ரீடெய்ல் […]