Vision Pro [Image Source : File Image]
அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ‘விஷன் ப்ரோ’ஹெட்செட்.
இந்த ஆண்டுக்கான WWDC 2023 நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நேற்று நடத்தியது. WWDC-என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் கூடும் ஒரு நிகழ்வாகும். இங்கு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றிற்கான புதிய OS மற்றும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் அறிவிக்கும் வகையில், இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் தாறுமாறான புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஹெட்செட் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சந்தைக்கு வருகிறது.
மேலும் விஷன் ப்ரோவில் ஆப்பிளின் முதல் 3-D கேமரா மூலம் புகைப்படம், வீடியோக்களை எடுத்து, அதனை நாம் மறுபடியும் போட்டோ கேலரியில் பார்க்கும் போது புகைப்படம்/வீடியோ எடுக்கப்பட்ட தருணத்தில் நாம் அருகில் இருந்தது போன்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்த VR- விர்ச்சுவல் ரியாலிட்டி யை காட்டிலும் விஷன் ப்ரோ அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Apple Vision Pro [Image Source : Twitter/@Apple]
குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.2.88 லட்சம் ஆகும்.
WWDC 2023-ல் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த ‘Apple Vision Pro’ சிறப்பம்சம்:
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…