தொழில்நுட்பம்

இனி இது இருந்தா போதும்… ஆப்பிளின் வேற லெவல் 3-D ஹெட்செட்… விஷன் ப்ரோ.!

Published by
கெளதம்

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ‘விஷன் ப்ரோ’ஹெட்செட்.

இந்த ஆண்டுக்கான WWDC 2023 நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நேற்று நடத்தியது. WWDC-என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் கூடும் ஒரு நிகழ்வாகும். இங்கு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றிற்கான புதிய OS மற்றும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் அறிவிக்கும் வகையில், இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் தாறுமாறான புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஹெட்செட் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சந்தைக்கு வருகிறது.

மேலும் விஷன் ப்ரோவில் ஆப்பிளின் முதல் 3-D கேமரா மூலம் புகைப்படம், வீடியோக்களை எடுத்து, அதனை நாம் மறுபடியும் போட்டோ கேலரியில் பார்க்கும் போது புகைப்படம்/வீடியோ எடுக்கப்பட்ட தருணத்தில் நாம் அருகில் இருந்தது போன்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்த VR- விர்ச்சுவல் ரியாலிட்டி யை காட்டிலும் விஷன் ப்ரோ அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Apple Vision Pro [Image Source : Twitter/@Apple]

குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.2.88 லட்சம் ஆகும்.

WWDC 2023-ல் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த ‘Apple Vision Pro’ சிறப்பம்சம்:

  • விஷன் ப்ரோ எடை குறைவு என்பதால் பேட்டரி பேக்கப் 2மணிநேரம் மட்டுமே
  • ஆப்பிள் விஷன் ப்ரோவை அணிந்து கொண்டால், போனின் ஆப்ஸ்கள்(Apps) நாம் பார்க்கும் விதமாக கண்களுக்கு தெரியும், அதனை நம் கைகளால் தொடுவதன் மூலமாகவும், பார்ப்பதன் மூலமாகவும் நம் குரல் மூலமும் கட்டுப்படுத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ரியல் தியேட்டர் அனுபவத்தை அதுவும் 4K தரத்திற்கும் மேலான அனுபவத்தில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சி போன்றவற்றை நாம் இருக்கும் இடத்தில் நம்மால் தேவையான அளவு திரையை பெரிதாக்கி பார்க்க முடியும். திரைப்படங்களை நமக்கு ஏற்ற ரெசொலூஷனில்(Resolution) மிகப்பெரிய திரையில் ஆடியோ அமைப்புடன் காணும் உண்மையான அனுபவம் மற்றும் கேம்ஸ்களில் நாமே அந்த விளையாட்டில் இருப்பதுபோன்ற தத்ரூபத்தை நீங்கள் உணரலாம்.
  • இதில், மொத்தம் 12 கேமராக்கள் உள்ளன, மேலும் இரண்டு 4K டிஸ்ப்ளேக்கள் ஐபீஸில் பொருத்தப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் அன்லாக்கிங்கிற்காக ஆப்டிக் ஐடி ரெட்டினல் ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் Magic Keyboard மற்றும் Magic Trackpad ஆகியவற்றிற்கான ஆதரவும் உள்ளது. இதன்மூலம் நாம் எந்த இடத்திலும் கீபோர்ட் அமைப்பை பார்க்கமுடியும், அதிலிருந்து நம்மால் டைப்பிங்(Typing) செய்து கொள்ளமுடியும்.
  • வால்ட் டிஸ்னியின் டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் சேவையும் விஷன் ப்ரோவின் முதல் நாளில் கிடைக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. டிஸ்னி பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்துடன்  சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
  • ஆப்பிள் விஷன் ப்ரோ அடுத்த ஆண்டு 2024 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது, ஆனால் இந்தியாவில் இதனை 2024 பாதியில் அல்லது இறுதியில் எதிர்பார்க்கலாம்.
Published by
கெளதம்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

10 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

10 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

11 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago