Twitter [Image Source : Business Standard]
மத்திய அரசின் உத்தரவை நிராகரித்த ட்விட்டருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது.
ஆனால், நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், ட்வீட் மற்றும் கணக்குகள் இரண்டையும் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று கூறி, ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்காததற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை 45 நாட்களில் கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதி கிருஷ்ணா உத்தரவிட்டார்.
இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை முடக்க இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் எனவும் கூறியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…