Twitter [Image Source : Business Standard]
மத்திய அரசின் உத்தரவை நிராகரித்த ட்விட்டருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது.
ஆனால், நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், ட்வீட் மற்றும் கணக்குகள் இரண்டையும் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று கூறி, ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்காததற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை 45 நாட்களில் கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதி கிருஷ்ணா உத்தரவிட்டார்.
இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தின் போது அரசை விமர்சிப்பவர்களின் தொடர்பான ட்விட்டர் கணக்கை முடக்க இந்திய அரசு தங்கள் இந்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சொன்னதை செய்யாவிட்டால் அலுவலகத்தை மூட நேரிடும் எனவும் கூறியதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…