தொழில்நுட்பம்

WhatsApp Channel: இனி அதிரடிதான்..! உலக அளவில் அறிமுகமானது வாட்ஸ்அப் சேனல் அம்சம்.!

Published by
செந்தில்குமார்

மெட்டாவின் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கூட ஒரு புதிய அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் சேனல் ஆனது உங்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாரை ஃபாலோ செய்கிறீர்கள் என்று மற்ற நபர்களுக்கு தெரியாது. இதில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில் சேனல்கள் தானாக ஃபில்டர் செய்யப்பட்டு வழங்கப்படும்.

அந்த சேனல்களில் உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் ஃபாலோ செய்யலாம். மேலும், ஃபாலோவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், புதிய மற்றும் செயலில் உள்ள சேனல்களின் அடிப்படையிலும் உங்களுக்கு காண்பிக்கப்படும். இரண்டாவதாக நீங்கள் எமோஜிகளைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கலாம்.

அதேபோல எத்தனை நபர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். ஆனால் நீங்கள் எந்த எமோஜி வைத்து கருத்து தெரிவித்துள்ளீர்கள் என்பது யாருக்கும் காட்டப்படாது. மூன்றாவதாக, ஒவ்வொரு முறையும் நீங்கள் மெசேஜ்கள் அல்லது குழுக்களுக்கு ஒரு அப்டேட்டை அனுப்பும்போது, சேனல் விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், உங்களைப் ஃபாலோ செய்யவும் ஒரு லிங்க் ஆனது அனுப்படும்.

மேலும், வாட்ஸ்அப் சேனல்களில் செய்திகள் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே இருக்கும். அதன்பிறகு அளிக்கப்படும். பயனர்களிடமிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் சேனல்களில் மேலும் பல அம்சங்களைச் சேர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேனல்களை தற்போது அனைவராலும் அணுக முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு…

1 hour ago

“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22…

1 hour ago

ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல்…

2 hours ago

“கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை” – ராமதாஸ்.!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

2 hours ago

ரோஹித்- கோலி கூட வேணாம்? ‘இந்த 4 பேரு RCB-க்கு போதும்’! விஜய் மல்லையா ஸ்கெட்ச்!

பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து  அடுத்ததாக அடுத்த…

4 hours ago

பாமக விவகாரம் : “அன்புமணியை சந்திக்க மாட்டேன்”…ராமதாஸ் பதில்!

சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங்…

5 hours ago