அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்..! இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்..!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சமானது ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல் போன்களில் பயன்படுத்துவது ஆகும்.

இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பை, இணையதளம், டேப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டாப்கள் போன்ற நான்கு கூடுதல் சாதனங்களில் இணைக்கலாம். மேலும் உங்களது முதன்மை சாதனத்தில் (மொபைல் போன்) உள்ள வாட்ஸ்அப் நீண்ட காலத்திற்கு செயலில் இல்லாமல் இருந்தால், அந்த கணக்கு இணைக்கப்பட்ட மற்ற துணை சாதனங்களிலிருந்தும் தானாகவே வெளியேறிவிடும்.

இந்த புதுப்பிப்பு உலகில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது, வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும்  வரும் வாரங்களில் துணை சாதனங்களுடன் இணைப்பதற்கான மாற்று வழியை அறிமுகப்படுத்துவதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதில் கியூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர, மொபைல் எண்ணை வாட்ஸ்அப் இணையத்தில் உள்ளிட்டு வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

5 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

6 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

6 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

7 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

8 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

10 hours ago