OPPO F23 5G [Image source : Twitter/@ishanagarwal24 ]
இந்தியாவில் OPPO F23 5G விலை, விவரக்குறிப்புகள், வண்ணங்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
OPPO F23 5G :
OPPO நிறுவனம் விரைவில் இந்தியாவில் OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், அதற்கு முன்பே OPPO F23 5G ஸ்மார்ட்போன் பற்றிய விலை மற்றும் சிறப்பு அம்சம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, இது இந்தியாவில் ரூ. 30,000-க்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மே 15 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
OPPO F23 5G சிறப்பு அம்சங்கள்
பேட்டரி எப்படி இருக்கும்..?
பொதுவாக போன் வாங்க வேண்டும் என்றாலே அந்த போன் நன்றாக சார்ஜ் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை பார்த்து தான் பலரும் வாங்குவது உண்டு. அந்த வகையில் இந்த OPPO F23 5G ஸ்மார்ட்போன் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பவர் இருப்பதால் சார்ஜ் நன்றாக நிற்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதால் 35-40 நிமிடங்களில் உங்களுடைய போனை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.கூல் பிளாக் மற்றும் போல்ட் கோல்ட் என இரண்டு வண்ண விருப்பங்களில் போன் வெளியிடபடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாமா..?
வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நல்ல பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்றால் இந்த OPPO F23 போனை நீங்கள் வாங்கலாம். இதற்கு முன்பு OPPO போன்களை உபயோகம் செய்தவர்களுக்கு இந்த ஃபோனும் கண்டிப்பாக பிடிக்கும். மேலும், இந்தியாவில் இந்த போன் வெளியாகுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…