ஸ்டூடியோ க்ரீன் நிறுவனர் கே.இ.ஞானவேல்ராஜா அண்மையில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக ரூபாய் 10 கோடி கமலஹாசன் வாங்கியதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை படம் நடித்துக் கொடுப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். மேலும், அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கே.இ.ஞானவேல்ராஜா கமலஹாசனுக்கு கொடுத்த 10 கோடி ரூபாய் பணத்திற்க்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…