ஸ்டூடியோ க்ரீன் நிறுவனர் கே.இ.ஞானவேல்ராஜா அண்மையில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக ரூபாய் 10 கோடி கமலஹாசன் வாங்கியதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை படம் நடித்துக் கொடுப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. என தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். மேலும், அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கே.இ.ஞானவேல்ராஜா கமலஹாசனுக்கு கொடுத்த 10 கோடி ரூபாய் பணத்திற்க்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…