அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன்!

Published by
Rebekal

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆயுதம் வைத்திருந்ததாக கூறி போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே டான்ட் எனும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே அச்சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள 13 வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி சிகாகோ போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. 9 நிமிடம் உள்ள இந்த வீடியோ காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு காவல் அதிகாரி ஒருவர் 13 வயதுடைய ஆடம் டோலிடோ எனும் பெயருடைய சிறுவனை மடக்கி, அவனது கைகளை உயர்த்தச் சொல்லி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த 13 வயது சிறுவன் ஆடம் டோலிடோ கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவருடன் 21 வயதுடைய ரூபன் எனும் இன்னொரு நபர் இருந்ததாகவும், அவர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அச்சிறுவனை சுடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் அருகிலுள்ள வேலிக்கு அருகில் துப்பாக்கியை ஆடம் டோலிடோ  தூக்கி வீசி உள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீசார் துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக தெரிவித்திருந்தாலும், 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago