அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன்!

Published by
Rebekal

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆயுதம் வைத்திருந்ததாக கூறி போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே டான்ட் எனும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே அச்சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள 13 வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி சிகாகோ போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. 9 நிமிடம் உள்ள இந்த வீடியோ காட்சியில், அடையாளம் தெரியாத ஒரு காவல் அதிகாரி ஒருவர் 13 வயதுடைய ஆடம் டோலிடோ எனும் பெயருடைய சிறுவனை மடக்கி, அவனது கைகளை உயர்த்தச் சொல்லி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த 13 வயது சிறுவன் ஆடம் டோலிடோ கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவருடன் 21 வயதுடைய ரூபன் எனும் இன்னொரு நபர் இருந்ததாகவும், அவர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அச்சிறுவனை சுடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் அருகிலுள்ள வேலிக்கு அருகில் துப்பாக்கியை ஆடம் டோலிடோ  தூக்கி வீசி உள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீசார் துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக தெரிவித்திருந்தாலும், 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

22 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago