லிபியாவில் 130 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதனால் லிபியாவில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக லிபியா மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இப்படி மேற்கொள்ளும் பயணங்கள் பல விபத்தில் முடிக்கின்றன. இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து குழந்தைகள் உள்பட 130 பேர் ரப்பர் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், 130 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தகவல் அறிந்து லிபியாவில் இயங்கி வரும் ஐரோப்பியாவின் கடல் மனிதாபிமான அமைப்பு விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்றபோது ஒருவரைக் கூட உயிருடன் பார்க்க முடியவில்லை என கூறினர். இதனால், பயணம் செய்த 130 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…