மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைதுசெய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளது.
இந்த கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் ராணுவம் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து மியான்மரில் உள்ள ஹஸ்வீ எனும் கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை மியான்மர் ராணுவத்தினர் நேற்று கைது செய்தனர்.
எனவே அந்த நபரை விடுவிக்கும் படி, கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் அந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 20 கிராம மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…