உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு…!

Published by
Rebekal

நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கொண்ட இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது காலை 8.45 மணிக்கு மோதியது. இந்த விமானம் முதலில் வடக்கு கோபுரத்தைத் தாக்கி உள்ளது. இதனால் ஏற்பட்ட தீயில் 102 நிமிடங்கள் வரை அந்த கோபுரம் எரிந்துள்ளது. அதன் பின்பு 18 நிமிடங்கள் கழித்து 9.03 மணிக்கு மற்றொரு விமானம் அடுத்த கோபுரத்தின் மீது மோதி தாக்கியுள்ளது. இந்த கோபுரம் 56 நிமிடங்களாக பற்றி எரிந்துள்ளது.

இந்த விமானத் தாக்குதலில் இரண்டு கட்டிடங்களும் தீப்பற்றி எரிந்ததில், கட்டிடத்திற்குள் இருந்த பலர் சிக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 2,606 பேர்  உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் மேற்குப்பகுதியில் மூன்றாவது விமானத் தாக்குதலும் தீவிரவாத கும்பலால் அரங்கேற்றப்பட்டது. மேலும் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்துள்ளது.

இது நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இது கீழே விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நான்கு விமான தாக்குதலில் 2,977 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பு தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் அல்கொய்தாவை அழிக்கவும், ஒசாமா பின்லேடனை பிடிக்கவும் போர் தொடுத்தார். இதற்காக சர்வதேச அளவில் அவர் கூட்டணியை உருவாக்கி 11 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை கொன்றது. சம்பவம் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும், தற்பொழுதும் அமெரிக்க வரலாற்றில் இந்த நாள் ஒரு கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

4 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

4 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

5 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

5 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

6 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

7 hours ago