பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மழை காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கெச் பகுதியிலிருந்து சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் வயதுமுதிர்ந்த பெண் உட்பட இரண்டு பேரின் உடல்கள் மீட்டுள்ளனர். மேலும் அதிலிருந்த 2 குழந்தைகள் காணவில்லை.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி, இதுவரை பாகிஸ்தானில் 21 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மழை வெள்ளத்தால் 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அங்குள்ள பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…