மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் டேவிஸ் நகரத்தின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 294 கிலோ வெண்கல சிலையை அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டது.
காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காந்தி நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து உள்ளதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து இந்தியா, வெறுக்கத்தக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய தரப்பில் அறிவுறுத்தல். இந்த சிலை இந்தியாவால் டேவிஸ் நகரத்திற்குகடந்த 2016 ஆம் ஆண்டில் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…