புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதலீட்டார்கள் மாநாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது ஏத்தெர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம்.இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது முதல் ஏத்தெர் எனெர்ஜி 450 (ather energy 450) என்ற மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது.
ஓசூரில் புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் உள்ள ஓசூர் தொழிற்பேட்டையில் சுமார் 4,00,000 சதுர அடி பரப்பளவில் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துள்ளது.இனி வரும் வருடங்களில் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தி தொடங்கப்பட்டால் ஆண்டுக்கு 500000 மின்சார ஸ்கூட்டர்கள் வரை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…