சமையல் அறையில் இருந்த ஓவியத்திற்கு ரூ.46,55,52,892 கோடியா..? உறைந்து போன 90 வயது மூதாட்டி ..!

Published by
murugan

பிரான்சில் உள்ள காம்பிக்னே நகரை சேர்ந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இந்த வீடு 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வீடாகும். இதைத்தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஏல அதிகாரிகளிடம் தனது வீட்டை விற்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த மூதாட்டி.

இதை தொடர்ந்து  ஏல அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் உள்ள மரபொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது சமையலறையில் எரிவாயு அடுப்பிற்கு மேலே  ஒரு பழமை  வாய்ந்த ஓவியம் ஒன்று இருந்தது. அதை பார்த்த அதிகாரிகள் ஓவியத்தை பற்றி பாட்டியிடம் கேட்டபோது இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும்  வேறு இடமில்லாமல் இந்த இடத்தில்  மாட்டி  வைத்துள்ளேன் என அவர் கூறினார்.

இதையடுத்து அந்த அதிகாரிகள் அந்த ஓவியத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓவியம் 13-ம்  நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்பூ  என்பவரால் வரையப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் இங்கு ஓவியத்தின் மதிப்பு சுமார் 6 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.46,55,52,892 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். இதைக்கேட்ட மூதாட்டிக்கு இன்பஅதிர்ச்சி உறைந்து போனார். அந்த ஓவியத்தை அடுத்த மாதம் அக்டோபர் 27-ஆம் தேதி ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

24 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago