இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதில் முதல் இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 12.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் 5.81 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 2.85 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 2.55 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 2.10 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இன்று வெளியான கர்ணன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…