ஜெருசலேமில் ஏற்பட்ட மோதல்களில் 50 பேர் கைது. 20 போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருப்பது ஜெருசலேம். இந்த பகுதியில் சமீப நாட்களாகவே பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கான புனித ஸ்தலங்கள் உள்ளது. இந்நிலையில் ஜெருசலேமில் ஒரு முக்கிய புனிதத் தலத்தில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடைபெற்றது.
இதில் வன்முறை எழக்கூடும் என்பதால் முஸ்லிம் மதத் தலைவர்கள் கட்டுப்பாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்நிலையில் முஸ்லிம் புனித ரமலான் மாதம் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய போலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பழைய நகரத்தின் டமாஸ்கஸ் வாயிலுக்கு வெளியே காவல்துறையினர் தடுப்புகளை வைத்ததனால் இந்த பதட்டம் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காவல்துறையினர் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசினர். அவர்கள் அதற்கு மாறாக தண்ணீர் பீரங்கி மற்றும் குண்டுகளை வீசி அவர்களை கலைத்தன.ர் இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர்.
லஹாவா என்று அழைக்கப்படும் ஒரு தீவிர வலதுசாரி யூத குழு நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களின் அணிவகுப்பை நடத்தியது. அவர்கள் ‘அரேபியர்களுக்கு மரணம், அரேபியர்கள் வெளியேறுங்கள்’ என்று கோஷமிட்டனர். இந்நிலையில் ஜெருசலேமில் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், பாலஸ்தீனர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற மோதலில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…