10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண்.
தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 வயது பெண் செய்துள்ள செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனென்றால், இந்த பெண் 10 முறை இதுவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.
விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், பின் மனக்கசப்பு ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை, 8 வதாக திருமணம் செய்த ஒருவருடன் மட்டும் 7 வருடம் வாழ்ந்துள்ளாராம். மற்றவர்களுடன் எல்லாம் 2 அல்லது 3 வருடம் தான் வாழ்ந்தாராம். இதுகுறித்து, அவரிடம் கேட்கையில், தனக்கு இதனால் வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், இன்னும் எனக்கான ஏற்ற துணையை கண்டறியும் வரை எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்ய தயார் என கூறியுள்ளாராம்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…