தாலிபான் பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது.
  • இந்நிலையில், நேற்று ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப் படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ(NATO) (வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு) கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் பேட்ஹிஸ் மாகாணத்தின் பாலாமுர்ஹப் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்கப்பட்டனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago