24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழப்பு.! கவலைக்கிடமாக 4,800 பேர் மருத்துவமனையில்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 3143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் சீன மக்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் 31 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 3 பெரும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவில் பல நகரங்களில் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணம் கடந்த இரு வாரங்களாக பூட்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஹூபே மாகாணதின் தலைநகர் வுஹானில் தான் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

39 minutes ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

60 minutes ago

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

3 hours ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

4 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

4 hours ago