மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் அருகே 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பசிபிக் ரிசார்ட் நகரமான அகாபுல்கோ அருகே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ நகரத்தில் கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் கட்டிடங்கள் குலுங்கின. 7.0 ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கம் அகாபுல்கோவின் வடகிழக்கில் 17 கிலோமீட்டர் (சுமார் 10 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நகரத்தில், தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நிலம் அதிர்ந்தது. ஆனால் மற்ற பகுதிகளில் குறைவாகவே தெரிந்தது என கூறப்படுகிறது. நில அதிர்வால் மக்கள் பீதியில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். அந்த சமயத்தில் மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என் மெக்ஸிகோ நகர அதிகாரிகள் கூறினர். இருப்பினும், சில சுற்றுப்புறங்களில் மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…