தண்ணீரில் தத்தளித்த தன் குடும்பத்தை காப்பாற்றிய 7 வயது சிறுவன்..!

Published by
Sharmi

நடு ஆற்றில் சிக்கி தவித்த தந்தையையும் தங்கையையும் காப்பாற்றிய 7 வயது மகன்.

அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் போவ்சிட். இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர். இவர் வார இறுதிநாட்களில் தனது குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். அதனால் சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவில் ஆற்றில் மீன்பிடிக்க 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்றவாறு தனது மகளுக்கு லைப் ஜாக்கெட் அணிவித்து அழைத்து சென்றுள்ளார்.

திடீரென்று ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஸ்டீபன் என்ன செய்வதென்று தெரியாமல் கரைக்கு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில் முடிய மூவரும் நடு ஆற்றில் சிக்கிக்கொண்டனர். வேறு வழியின்றி சத்தமிட்டு உதவிக்கு அழைக்க நினைத்தனர். ஆனால் இவர்களின் குரல் யாருக்கும் எட்டவில்லை. ஸ்டீபனுக்கும் அவரது மகன் செஸ்ஸுக்கும் நீச்சல் தெரியும். அவரது மகள் அபிகெலுக்கு நீச்சல் தெரியாததால் அங்கிருந்து இவர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். அதனால் செஸ்ஸை கரைக்கு அனுப்பி உதவிக்கு அழைத்து வர முடிவு செய்தார்.

அதன்படி, 7 வயது செஸ் வேகமாக வந்த தண்ணீரையும் சற்றும் பொருட்படுத்தாமல் தனது குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 1 மணி நேரம் நீச்சல் செய்து கரையை அடைந்தான். பிறகு தீயணைப்பு வீரர்களுடன் ஆற்றின் நடுவில் சிக்கிய தனது தந்தை மற்றும் தங்கையை காப்பாற்றினான். தன் குடும்பத்தை காப்பாற்ற 7 வயது சிறுவன் 1 மணி நேரம் அயராது நீச்சல் செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற வீரர்களே இப்படி நீச்சல் செய்ய முடியும் என்பதால் செஸின் வீரம் மற்றும் துணிச்சலை அதிகாரிகள் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

Recent Posts

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

32 minutes ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

1 hour ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

1 hour ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

3 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago