அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விமானத்தை தயாரித்து வரும் “போயிங்” நிறுவனம் தயாரித்த “737 மேக்ஸ்” ரக விமானங்கள் சமீபத்தில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் சிக்கியது. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் இறந்து உள்ளனர். இந்த விமானங்களில் இருந்து ஒரு பயணி கூட உயிர் பிழைக்கவில்லை.
தொடர்ந்து “737 மேக்ஸ்” ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதால் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அனைத்து நாடுகளும்”737 மேக்ஸ்”விமானங்களை இயக்க தடைவிதித்து உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தடையை நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடலாம் என “போயிங்”நிறுவனம் எண்ணியது. ஆனால் “737 மேக்ஸ்” விமானங்கள் சேவைக்கு அங்கீகரிக்க முடியாது என அமெரிக்க போக்குவரத்து கழகம் கூறியது.இந்த நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் “737 மேக்ஸ்” விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என “போயிங்” நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…