இங்கிலாந்தில் முதன் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 82 வயது நீரழிவு நோயாளி!

Published by
Rebekal

அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு ஊசி ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக போடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு கொண்டு இருந்ததை அடுத்து தற்போது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான பிரையன் பிங்கர் நீரிழிவு நோயாளிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல் டோஸ் போட்டுக் கொள்ள இருக்கிறார்கள். வரும் சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோஎன்டெக்  நிறுவனங்களின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்து பத்து லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago