தங்கையை காப்பாற்ற நாயிடம் கடி வாங்கி 90 தையல்போட்ட 6 வயது சிறுவன் !

Published by
murugan

அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன்.

அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி  பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் . இதனால்,  உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப்  விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர்.

இந்த தாக்குதலில் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.  இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், எனது மருமகன் ஒரு ஹீரோ. தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான்.  இதுகுறித்து அவனிடம் கேட்டபோது ” அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்றால் அது  நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னான். இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் உட்பட உடலில் கிட்டத்தட்ட 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.

தற்போது, பிரிட்ஜர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்களிடம் இந்தத் தகவலைச் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்குத் துணையாக இன்னொரு ஹீரோ வந்திருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

Published by
murugan

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

51 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

5 hours ago