ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சாபுல் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானதாகவும் மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் சாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் கூறியுள்ளார்,
மேலும் 28 பேர் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும் அதில் பெண்கள் மற்றம் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார், இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உடனடியாக பொருப்பேற்கவில்லை என்றும், இது குறித்த கேள்விகளுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கம் மௌனம் சாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து திங்கள்கிழமை அதிகாலை, தலைநகர் காபூலுக்கு வடக்கே பர்வான் மாகாணத்தில் ஒரு குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
குறிப்பாக செப்டம்பர் 11 க்குள் ஆப்கான் எல்லையில் உள்ள தனது அனைத்து துருப்புக்களையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்த பின்னர் சமீபத்திய வாரங்களில் வன்முறை தீவிரமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வார இறுதியில் ஈத் அல் பித்ரின் மத விடுமுறைக்கு மூன்று நாள் போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக தலிபான் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் போர்நிறுத்த அறிவிப்பு வந்த பிறகு காபூலில் ஒரு பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் பெரும்பாலோர் பெண் மாணவர்கள், மற்றும் 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…