வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தையின் செயல் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வசித்து வரக்கூடிய ஒரு நபர் வறுமை காரணமாக தனது வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடனும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், குடும்பத்தில் வறுமை அதிக அளவில் தலைதூக்கியதை அடுத்து, ஜம்பர் எனும் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார்.
இந்நிலையில், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கால்வாயில் தூக்கி எறியப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் தூக்கி வீசிய 5 குழந்தைகளில் தற்பொழுது ஒரு வயது மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகள் மட்டுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தான் பெற்ற குழந்தைகளையே வறுமை காரணமாக தந்தை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…