பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையிலிருந்து ஏராளமான பலர் வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவையே ஆட்டி படைத்து முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் வலம் வருபவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் என பலரை சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் இவருக்கு இப்போதே ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. அதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மகாபாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அது மட்டுமின்றி பாலாஜி சக்திவேல் இயக்கிய ஒரு படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…