தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக கர்ணன் படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக படத்தின் டைட்டில் கர்ணன் என்று வைக்க கூடாது என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டு கூறிவந்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த மாதம் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பட்ட சமூகத்தை சார்ந்தது என்பதால் படத்திலிருந்து பாடலை நீக்க கோரி வழக்கு தொடர பட்டது. இதனால் பண்டாரத்தி புராணம் பாடலை மஞ்சனத்தி புராணம் என்று படக்குழுவினர் மாற்றினார்கள்.
அதற்கு பிறகு இருந்து டீசர் மட்டுமே வெளியான நிலையில் டிரைலர் என் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அதற்கான விளக்கம் தற்போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆம், இது போன்று தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…